Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐஸ்வர்ய கணபதி கோவில் கும்பாபிஷேகம் கருப்பராயசாமி கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள அம்மனுக்கு 1 டன் உணவு படையல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2022
03:03

ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, 1 டன் எடையில் உணவு படையல் வைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம் அருகே, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.மாசி மாத அமாவாசையன்று மயான கொள்ளை விழா நடந்து, நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு படையல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், தங்கள் வீட்டில்இருந்து அரிசி சாதம், கறி சமைத்து எடுத்து வந்தனர். இரவு 7:00 மணிக்கு துவங்கி, நள்ளிரவு வரை நடந்த நிகழச்சியில் 600 கிலோ சாதம், 400 கிலோ கறியுடன், படையல் வைக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். படையல், பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

ித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 24-2.2022 ஆம் தேதி அன்று பத்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக 1.3 .2022 அன்று மகா சிவராத்திரி ,அதனைத் தொடர்ந்து தேர் திருவிழா ,சாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி அம்மையார்களின் ஊர்வலத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிக்கை தாயாருக்கும் அரசு சார்பில் மற்றும் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயில் சார்பில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உட்பட இன்று காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வர்லு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அகரம். மோகன் ரெட்டி ஆகியோர் இன்று பட்டு வஸ்திரங்களை (சீர்வரிசை பொருட்களை) ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வழங்க வந்தவர்களை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி அறங்காவலர் குழுத்தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.தொடர்ந்து பட்டு வஸ்திரங்களை தலைமீது சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் வேத பண்டிதர்களிடம் வழங்கியதோடு  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் வேத பண்டிதர்களால் ஆசீர்வாதம் செய்யப்பட்டதோடு  சாமி படத்தையும் தீர்த்தப் பிரசாதங்களையும் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar