கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் சளிவயல் விநாயகர், மாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோயில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு, அங்குள்ள ஆற்றியிலிருந்து, அம்மன் குடியழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 11:30 மணிக்கு தானிமட்டம் ஆற்றிலிருந்து, பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. இதில், பக்தர்கள் பறவைக் காவடி பூட்டியும்; வேல் குத்தியும்; பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து, இரவு திருத்தேர் ஊர்வலம் நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன், விழா நிறைவு பெறுகிறது.