Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி ... காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூர் பத்மாவதி கோயிலில் தலைமை நீதிபதி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்சானூர் பத்மாவதி கோயிலில் தலைமை நீதிபதி தரிசனம்

பதிவு செய்த நாள்

06 மார்
2022
04:03

 திருச்சானூர் : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார். முன்னதாக  மதியம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை மாவட்ட  துணை முதல்வர் நாராயண சுவாமி, மாவட்ட கலெக்டர் ஹரிநாராயணன், எம்எல்ஏ கருணாகர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயாரை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு வேத பண்டிதர்கள் வேதபாராயணம் செய்து வைத்து தாயாரின்  தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. கூடுதல் செயலதிகாரி  தர்மா ரெட்டி, இணை செயலதிகாரி வீரபிரம்மன், முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் , விஜிஓ மனோகர், கோயில் துணை செயல் அதிகாரி கஸ்தூரிபாய், ஏஇஓ பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களின் நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டியின் மூலம் 15 கோடியில் அலிபிரியில் கட்டப்பட்ட சப்த கோ பிரதக்ஷிண கோவிலை பார்வையிட்டு அங்குள்ள வேணு கோபால கிருஷ்ணரை   தரிசனம் செய்தார். பின்னர் அங்கு உள்ள பசு மாட்டிற்கு தீவனங்கள் வழங்கி துலாபாரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் திருமலைக்கு சென்ற என்.வி. ரமணா போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  பஞ்சகவ்யம் பொருட்களைக் கொண்டு தற்போது தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் சோப்பு, ஷாம்பு, விபூதி உள்ளிட்ட பொருட்களையும், சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட பூக்களைக் கொண்டு தயார் செய்யப்படும் ஊதுபத்தி மற்றும் புகைப்படங்களை  அதிகாரிகள் தலைமை நீதிபதி என். வி. ரமணாவிற்கு காண்பித்து விளக்கம் அளித்து கொரோனா நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு செய்யப்பட்டுவரும் ஏற்பாடுகள் குறித்தும் தரிசனம் குறித்து விளக்கமளித்தனர். இதனை தொடர்ந்து இரவு திருமலையில் தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar