அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக உற்சவ விழா நடந்தது. இதையொட்டி காலை யாகசாலை பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேக, ஆராதனைக்கு முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.