திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் கொடிமரத்திற்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2022 04:03
திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்த புதிய கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இக்கோயிலில் இருந்த கொடி மரம் பழுதடைந்ததை அடுத்து புதிய கொடிமரத்திற்கான திருப்பணி நடந்தது. புதிய பொன்னிற தகடால் வேயப்பட்ட 20 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்து சர்வ அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியருடன் அருள்பாலித்தார். யாகசாலை அருகில் உற்ஸவர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இரண்டாம் கால பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்கள் கொடிமரத்திற்கு புறப்பாடானது. காலை 11.00 மணி அளவில் கொடிமரத்திற்கு கலச நீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் பீடத்திற்கு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று கொடிமரத்தை தரிசித்தனர். நாளை காலை 9:00 மணிக்கு இரண்டாம் காலயாகசாலை பூஜைகள் துவங்கி, காலை 10:30 மணிக்குள் கொடி மரம் பிரதிஷ்டை நடைபெறும்.