நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராஜகோபுர திருப்பணிக்கு பந்தல்கால்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2022 04:03
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் கும்பாபிேஷகம் திருப்பணிக்கு ராஜகோபுர திருப்பணிக்கு நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது.மூலவர் ஸ்ரீ ரங்கநாதராகவும்,உத்ஸவர் நித்யகல்யாண பெருமாளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.இதனால் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.மார்கழி மாதம் பெருமாளுக்கு தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இந்நிலையில் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் பணிகள் குறித்து புதுச்சேரி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திருப்பணிக்கு விமான பாலாலயம் செய்யப்பட்ட நிலையில் நேற்று ராஜகோபுர திருப்பணிகள் தொடங்குவதால் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதனால் பந்தகாலுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.மேள வாத்தியங்களுடன் பிராகார வலம் வந்து,கோயில் வாயிலில் பந்தல்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாஜிம் எம்.எல்.ஏ.,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிருநாதன்,அறங்காவல் வாரியத் தலைவர் கேசவன்,செயலாளர் பக்கிரிசாமி,பொளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் உள்ளிட்ட நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.இதில் பக்தர்கள பலர் கலந்து கொண்டனர்.