ருத்ராபதியார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2022 04:03
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ருத்ராபதியார் கோவிலில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தோப்புத் தெருவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ருத்ராபதியார் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வேதவிற்பன்னர்கள் நான்குகால பூஜை செய்து இன்று மகா பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின் மேளதாளம் முழங்க, வானவேடிக்கை விண்னை எட்ட, புனிதநீர் அடங்கிய யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தது தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத கோயில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றபட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ருத்ராபதியாரின் அருளை பெற்றனர்.