பதிவு செய்த நாள்
06
மார்
2022
04:03
தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேவதானப்பட்டியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் மஞ்சளாறு ஆற்றங்கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பழமையான கோயில். இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. மஞ்சளாற்றின் குளித்துவிட்டு காமாட்சி அம்மனை பக்தர்கள் வணங்குவர். மாலை 6: மணிக்கு உருமி, சங்கு சேகண்டி முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பல்வேறு காரியங்களுக்கு உத்தரவு கேட்பது வழக்கம் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கும் நெய்யில் எறும்பு, ஈ, எதுவும் அருகே வராது. 24 மணி நேரமும் நெய் விளக்கு எரியும்.
தீச்சட்டி எடுத்த பக்தர்கள்: ஞாயிற்றுக்கிழமை 6ம் நாள் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பொங்கல் வைத்தல், தீச்சட்டி, பிள்ளை வரத்திற்காக அம்மனை வேண்டியவர்கள், அந்தக் குழந்தையை கரும்பில் தொட்டில் கட்டி, நேத்திக்கடன் செலுத்தினர். மார்ச் 8 திருவிழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் வைரவன் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.