பதிவு செய்த நாள்
06
மார்
2022
05:03
திருத்தணி, : திருத்தணி முருகன் கோவிலில் கட்டியுள்ள ராஜகோபுரத்திற்கு வாசற்கால் அமைக்க, கருங்கல் துாண்கள் மலைக்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன.திருத்தணி முருகன் மலைக்கோவிலில், புதிதாக 123 அடி உயரமுள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்திற்கு இருபுறமும், கருங்கல் வாசற்கால் துாண்களை, திருவள்ளூர் மாவட்டம், கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்த தனியார் ஒருவர் உபயமாக வழங்கினார்.ராஜகோபுரத்திற்கு, 30 அடி உயரம், 3 அடி அகலத்தில் ஆறு கற்கள்; 20 அடி உயரம், 3 அடி அகலத்தில் நான்கு கற்கள்; 10 அடி உயரம், 3 அடி அகலத்தில் இரு கற்கள் என மொத்தம் 12 கற்கள் உபயமாக வழங்கப்பட்டன. இவற்றின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய். இந்த கருங்கல் துாண்கள், கே.ஜி.கண்டிகையில் இருந்து திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு நேற்று, லாரியில் எடுத்து வரப்பட்டன.வரும் வழியில், பக்தர்கள் கருங்கல் வாசற்கால் துாண்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.