கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2022 10:03
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் ஆவுடைநாயகி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று கைலாசநாதரை தரிசனம் செய்து சென்றனர்.
இந்துக்கள் அனைவருக்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருகைலாயமலை தரிசனம் என்பது மிகவும் பாக்கியம், பிள்ளைப்பேறு வேண்டி மலையத்துவஜ பாண்டியன் கைலாயத்திற்கு யாத்திரை செல்லும் வழியில் வேம்பத்தூர் வரும் போது மனமே கயிலாயம் எனஅசரீரி குரல் கேட்டு இங்கு வழிபட்டதால் கைலாயம் சென்ற புண்ணியம் கிடைத்தது. அவரால் உருவாக்கப்பட்டது என வேம்பத்ததூர் கைலாசநாதர் ஆலயம், திருக்கைலாயத்திற்கு செல்ல நினைக்கும் பக்தர்கள் வேம்பத்தூர் கைலாசநாதர் ஆலயம் சென்று தரிசனம் செய்தால் கயிலாயம் சென்ற புண்ணியம் கிடைக்கும் என நம்பபடுகிறது. வேம்பத்தூர் கைலாசநாதர் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 76 ஆண்டுகள் கடந்த நிலையில் சிவனடியார்கள் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன . பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை ஏழு மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து சிவாச்சார்யார்கள் யாகசாலையை வலம் வந்தனர். காலை 7:50 மணிக்கு வானத்தில் கருட பகவான் காட்சி தர கயிலாய வாத்தியங்கள் முழங்க கைலாசநாதர் ஆலய மூலவர் கும்பத்திற்கும் ஆவுடைய நாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கைலாச நாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.