பதிவு செய்த நாள்
07
மார்
2022
10:03
பெரம்பலுார்: சிறுகளத்துார் கிராமத்திலுள்ள பெரியாண்டவர் கோவில் திருவிழாவில், நேற்று மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
அரியலுார் மாவட்டம், சிறுகளத்துார் கிராமத்திலுள்ள பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, மயானக் கொள்ளை நடந்தது.முன்னதாக பெரியாண்டவர், பெரியநாயகி சாமிகளுக்கு பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர், அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்த அம்மன், நிசானி உடல் கிழித்து, குடலை பிடுங்கி வல்லாலகோட்டை இடித்து, வீதி உலா புறப்பட்டது.திரளான பக்தர்கள் பாவாடைராயன், அங்காளம்மன், ரத்த காட்டேரி போல வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிறுகளத்துார் அருகே உள்ள மயானத்தை அடைந்தனர். நேற்று, அங்கு மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.