மண்டைக்காடு மாசிக்கொடை விழா: நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2022 03:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு ப கவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவில் நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது. மண்டைக்காடு ப கவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் யானை மீது சந் தனகுடம் பவனி, பகல் 12 மணிக்கு அனந்தமங்கலத்தில் இருந்து காவடி பவனி, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை, 9.30 மணிக்கு பெரிய ச க்கரதீவெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடக்கிறது. பத்தாம் நாளான நாளை அதிகாலை 2 மணிக்கு பால்குளம் கண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து யானை மீது களபம் பவனி, காலை 6 மணி முதல் குத்தியோட்டம் மற்றும் பூமாலை , 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவின் பத்தாம் நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு அடைக்கப்படும் திருநடை மாலை 5 மணிக்கு தான் திறக்கப்படும். ப கல் 13 மணி நேரம் கோயிலுக்குள் எந்த பூஜையும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.