Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ... இன்று செவ்வாய், சஷ்டி, கார்த்திகை: வாசகர்களே! முருகனை கோவிலில் வழிபடுங்கள்: அருளைப் பெறுங்கள்! இன்று செவ்வாய், சஷ்டி, கார்த்திகை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் பல்லக்கு சேவை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் பல்லக்கு சேவை

பதிவு செய்த நாள்

07 மார்
2022
08:03

சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 11 -ஆவது நாள் இரவு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும் காமதேனு வாகனத்தில் ஞான பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர் . நான்கு மாட வீதி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து சாமி தரிசனம் செய்தனர் . முன்னதாக கடந்த 24 .2 .2022 அன்று பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கிய மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று இரவு 5.2.2022 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடி இறக்குதல் நிகழ்ச்சி சாஸ்திர பூர்வமாக நடைபெற்றது .

காளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கடந்த 25.2 2022 அன்று ஏற்றப்பட்ட கொடியேற்றம் நேற்று கொடி இறக்குதல் நிகழ்ச்சி ஆகம முறைப்படி நடைபெற்றது .முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் காளஹஸ்தீஸ்வரர் ஞானபிரசுனாம்பிகை தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடி மரம் அருகில் கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர் . அதனைத் தொடர்ந்து யாக சாலையில் கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட சுவாமி அம்மையார்களின் ஆவாஹன கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கலசங்களை அர்ச்சகர்கள் தலை மீது சுமந்து கோயிலில் வலம்  வந்ததைத் தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடிமரம் அருகில் கொண்டு வந்து ஆகம முறைப்படி கலச உத்வியாசன(அபிஷேகம்) செய்தனர் அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  செய்து முடித்தப் பின்னர்  கொடி மரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரர் கொடியை கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் இறக்கும் நிகழ்ச்சி சாஸ்திர பூர்வமாக நடைபெற்றது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானபிரசுனாம்பிகை தாயாருக்கும் அலங்கார மண்டபத்தில் (உற்சவ மூர்த்திகளுக்கு )மஞ்சல் ,குங்குமம் ,சந்தனம், இளநீர் ,பால் ,தயிர் ,பஞ்சாமிர்தம், விபூதி,  சொர்ணமுகி ஆற்றின் புண்ணிய ஜலத்துடன் சிறப்பு அபிஷேகம் நடத்தியதோடு சுவாமி அம்மையாரின் உற்சவ மூர்த்திகளை நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்தனர் .தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள (மூன்றாவது கோபுரம்) திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள சூரிய புஷ்கரணி அருகில் திரிசூலத்தை கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர் .அதனைத்தடர்ந்து  திரிசூலத்திற்கு சாஸ்திர பூர்வமாக அபிஷேகங்கள் நடத்தினர். இதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தம்பதியினர், கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர். இன்று 7.3 .2022  இரவு  மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் பன்னிரண்டாவது நாள் இரவு பல்லக்கு சேவை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஸ்ரீசவுடம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு தண்ணீர் லாரி உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
பல்லடம்: செஞ்சேரிமலையில், தைப்பூச விழா வை முன்னிட்டு நடக்கவுள்ள தேர்த்திருவிழாவுக்கு, தங்கத்தேர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், கணபதி, ... மேலும்
 
temple news
திருநின்றவூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar