கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், ஒன்றரை ஆண்டுக்குப்பின் தேரோட்டம் நடந்தது.இக்கோவிலில், 8 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி, 160 கிலோ செம்பு ஆகிய கலவையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்குப்பின் நேற்று, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பலத்த மழைக்கு இடையே பக்தர்கள் தேரோட்டத்தின் போது ஸ்வாமி தரிசனம் செய்தினர்.