பதிவு செய்த நாள்
12
மார்
2022
08:03
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே ரங்கம்மாள் காலனியில் சக்தி மாரியம்மன் மாசித் திருவிழா துவங்கியது.
விழா கடந்த, 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இம்மாதம், 17ம் தேதி வரை தொடர்ந்து நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் சக்தி மாரியம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன், இரண்டாம் நாள் மீனாட்சி அம்மன், மூன்றாம் நாள் காமாட்சி அம்மன், நான்காம் நாள் விசாலாட்சி அம்மன், ஐந்தாம் நாள் மகாலட்சுமி அம்மன், ஆறாம் நாள் அன்னபூரணி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வரும், 14ம் தேதி இரவு, 10:00 மணிக்கு சக்தி கம்பம் நடுதல், தொடர்ந்து முளைப்பாரி எடுத்து வருதல், பட்டு சீர் நகை எடுத்து வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம் நடக்கிறது. இம்மாதம், 16ம் தேதி சக்தி கரகம் அழைத்தல், பால்குடம் எடுத்து வருதல், அக்னி சட்டி எடுத்து வருதல், அக்கினி அபிஷேகம், மாவிளக்கு நிகழ்ச்சிகளும், 17ம் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.