Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துரோபதையம்மன் கோயிலில் ... கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் கொடியேற்றம் கொல்லங்குடி வெட்டுடையார் காளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் கும்பாபிஷேகப் பணிகள் துவங்குவது எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2022
10:03

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் தென்காளஹஸ்தி என்ற பெயர் பெற்றது.இங்கு ராகு கேது தனித்தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ராகு-கேது வேளையில் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து பங்கேற்கின்றனர். சிறப்புக்கள் பல பெற்ற இந்த கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.கடந்த ஆண்டு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி குழுவை தமிழக அரசு நியமித்தது.ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு, பல திருப்பணிகளை செய்தது.ஒரு சில பணிகள் மட்டும் பாக்கி இருக்கும் நிலையில், திருப்பணிக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அத்தோடு ஆட்சியும் மாறியது. அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பணிக்குழு நியமிக்கப்பட்டதால், திருப் பணியை தொடர அந்தக் குழுவிற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் கோயில் வளாகத்திற்குள் தோண்டிய பள்ளம் அப்படியே விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பணிகளை மேற்கொண்ட குழு அல்லது புதிய திருப்பணிக்குழுவை நியமித்து மீதமுள்ள பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையதுறை முன்வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar