Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் சேதமடைந்த உடை ... சுமங்கலி பாக்கியம் தரும் காரடையான் நோன்பு : கயிறு கட்ட நல்ல நேரம்.. சுமங்கலி பாக்கியம் தரும் காரடையான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணியூர் கோவில்களில் கும்பாபிஷேக விழா : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கணியூர் கோவில்களில் கும்பாபிஷேக விழா : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 மார்
2022
07:03

கருமத்தம்பட்டி: கணியூரில், ஐந்து கோவில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில், விநாயகர், முருகன், மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் பழமையானவை. இக்கோவில்களில், கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. வர்ணம் தீட்டுதல், மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா கடந்த, 11 ம்தேதி காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. முதற்கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. நான்கு கால ஹோமங்கள் முடிந்து, நேற்று காலை புனிதநீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 7:00 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.. 8:00 மணிக்கு, விநாயகர், முருகர், மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் கொங்கலம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து, கும்மியாட்டம், ஊஞ்சப் பாளையம் சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவின் ஒயிலாட்டம், ராயர்பாளையம் வேலவன் காவடி குழுவின் காவடியாட்டம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar