Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா ... பறவைக் காவடி, தீச்சட்டி எடுத்து  பக்தர்கள் நேர்த்திக்கடன் பறவைக் காவடி, தீச்சட்டி எடுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை
எழுத்தின் அளவு:
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை

பதிவு செய்த நாள்

14 மார்
2022
09:03

தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் நேற்று இரவு கல்கருட சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்யதேசங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14வது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது. இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருடபகவான் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் உற்சவராக வீதியுலா வருவது பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி  நடைபெற்றது. முன்னதாக விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெறுகிறது. நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி  நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து கருடபகவான் வாகன மண்டபம் காட்சியளித்தார். அப்போது  பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் காட்சியளித்தார். இந்த  கருடசேவையின்போது நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கோவிலின்  வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்வதனர்.  9ம் நாள் விழாவாக வருகிற 18ம் தேதி காலை திருத்தேரோட்டமும், மதியம் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எளிய முறையில் கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்ற கல் கருட சேவை இவ்வாண்டு பக்தர்கள் பங்கேற்போடு வெகு சிறப்பாக நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar