மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2022 03:03
காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாவில் நேற்று ரதம்,பல்லாக்கு வீதி உலா நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் (பெரிய பள்ளிவாசல்) 199ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று துவங்கியது.பகல் 3.00 மணிக்கு இரதம்,பல்லக்கு ஊர்வலம் துவங்கியது.பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இரதம்,பல்லக்குகள் பள்ளிவாசல் வழியாக லெமர்வீதி,பாரதியார்சாலை,திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இரவு 9மணிக்கு கொடியேற்றம் நடந்தது.வரும் மார்ச் 22ம் தேதி இரவு 9மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா, இரவு 10.00மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல். அதிகாலை 3.30மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி, மார்ச் 25ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது.கந்தூரி விழா ஏற்பாடுகளை மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் சிறப்பாக செய்து வருகின்றனர்.நேற்று பல்லாக்கு ரதம் புறப்பாடில் தொகுதி எம்.எல்.ஏ.,நாஜிம் மற்றும் இஸ்லாமிய மக்கள் பலர் கலந்துகொண்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்.பி.,க்கள் சுப்ரமணியன்,கெளஹால் நிதின் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.