Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பிரம்மோத்ஸவ விழா: ... அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்: சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு ஆலோசனை அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 மார்
2022
08:03

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜையும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடந்து வருகிறது. திருவிழாவின் முதல்நாள் இரவு, 8:00 மணிக்கு, மலர் பல்லக்கிலும், இரண்டாம் நாளில் சூரிய பிரபை, சந்திர பிரபையிலும், மூன்றாம் நாளில் சிம்ம வாகனத்திலும், நான்காம் நாளில் காமதேனு வாகனத்திலும், ஐந்தாம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளையானை சேவை நடந்தது. ஏழாம் நாளான நேற்று, திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், காலை, 8:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை மற்றும் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர், அலங்கரிக்கப்பட்டிருந்த தனித்தனி தேரில் எழுந்தருளினர். மாலை, 4:40 மணிக்கு, பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தேரை வடம்பிடித்து இழுத்து, தோரோட்டத்தை துவங்கி வைத்தனர். ஐந்து தேர்களும், சிறுவாணி ரோடு, ரத வீதி வழியாக, கோவிலை சுற்றிய தேர்கள் மீண்டும் நிலையை அடைந்தன. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பேரூரா பட்டீசா என, கோஷங்கள் எழுப்பினர். வரும், 18ம் தேதி, நடராஜப்பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, திருவீதி உலா வந்து, யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு, கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar