நத்தம்: நத்தம் அருகே காசம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
இதனை முன்னிட்டு காசம்பட்டி கிராமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன் கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா ஏற்கனவே நடந்து முடிந்தது. இதையொட்டி 48 நாட்கள் தினமும் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று 48வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இதில் சங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் சிறப்பு அன்னதானம் நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.