Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர நாளான இன்று இதை ... 2 ஆண்டுகளுக்கு பின் தடை நீக்கம் பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் 2 ஆண்டுகளுக்கு பின் தடை நீக்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நேற்று திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பழநியில் நேற்று திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

18 மார்
2022
09:03

பழநி: பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது

பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, முருகனின் மூன்றாம் படைவீடான வீடான திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. மேலும் மாலை நேரத்தில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு தங்கமயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

திருக்கல்யாணம்: பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று மாலை 5:45 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருமண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 8.00 மணிக்கு மேல் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வெள்ளி ரதத்தில் கிரி வீதியில் தேரோட்டம் நடைபெற்றது. இன்று (மார்ச்.,18) அதிகாலையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. அதன்பின் திருஆவினன்குடிக்கு தந்த பல்லாக்கில் சுவாமி எழுந்தருளுவார். மாலை 4:45 மணிக்கு மேல் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெறும். இரவு 9:00 மணிக்கு தங்கப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 21, அன்று கொடி இறக்குதல் உடன் பங்குனி உத்திர உற்சவம் நிறைவு பெறு உள்ளது. பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் அடிவாரம் குடமுழுக்கு அரங்கில் தினந்தோறும் மாலை 4:00 மணிக்கு மேல் நடைபெற்று வருகிறது. திருக்கல்யாண உற்சவத்தில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர்கள் முருகேசன், வடிவுக்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் ஆவிணிப்பட்டி பக்த ஜெயங்கொண்ட ஆஞ்சநேயர் கோயிலில்  சுதர்ஷன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar