ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர நாளான இன்று திருக்கல்யாண உற்சவத்தின் 9ம் திருநாளில் செப்பு தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7:20 மணிக்கு செப்பு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஒரு மணி நேரத்தில் ரதவீதி சுற்றி தேர் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.