பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2022 07:03
பழநி : பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, முருகனின் மூன்றாம் படைவீடான வீடான திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. மேலும் மாலை நேரத்தில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு தங்கமயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று (மார்ச்.,18) அதிகாலையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. அதன்பின் திருஆவினன்குடிக்கு தந்த பல்லாக்கில் சுவாமி எழுந்தருளினார். மாலை 4:45 மணிக்கு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.