Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பங்குனி உத்திர ... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் – ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

19 மார்
2022
09:03

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வருடம் தோறும் பங்குனி உத்திரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடப்பது வழக்கம். இந்த வருடமும் கடந்த மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.

இதனை முன்னிட்டு ஒன்பதாம் திருநாளான நேற்று காலை 10:00 மணிக்கு கோவில் பட்டர்கள், கோட்டைத்தலைவாசல் ரேணுகா தேவி கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு திருக்கல்யாண பட்டுப்புடவை,, ரெங்கமன்னாருக்கு வேஷ்டி, திருமாங்கல்யத்தை பெற்று வந்தனர். பின்னர் கோயிலில் திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், வேதபிரான் பட்டர் தேங்காய் பெறுதல், பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எழுந்தருளலும் நடந்தது. மாலை 4 மணிக்கு அங்கமணிகளுடன் ஆண்டாள் வீதி சுற்றி வந்தார். பின்னர் மணவாளமாமுனி சன்னதி வாசலில் ஆண்டாள், ரங்கமன்னார் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. இதனையடுத்து ஆண்டாள், ரங்கமன்னார் மனமேடை எழுந்தருளினர். பின்னர் பெரியாழ்வார் முன்னிலையில் இரவு 7:35 மணிக்கு திருக்கல்யாண வைபவத்தை ரகுபட்டர் நடத்தினர். திருக்கல்யாணம் முடிந்த பிறகு ஆண்டாளுக்கு, திருமலை திருப்பதி கோயில் பட்டு சாற்றப்பட்டது. திரளான பக்தர்கள் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar