Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ... திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம பாத யாத்திரை புறப்பாடு
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம பாத யாத்திரை புறப்பாடு

பதிவு செய்த நாள்

19 மார்
2022
09:03

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை குருலிங்க சங்கம பாத யாத்திரையை தொடங்கினார்.

அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மார்ச் 27-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.  குடமுழுக்கு விழாவுக்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பூஜாமூர்த்தியாகிய சொக்கநாதப் பெருமானுடன் குருலிங்க சங்கம பாத யாத்திரையாக சென்று பங்கேற்கிறார். பாத யாத்திரையையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை தருமபுரம் ஆதீனத் திருமடம்  ஸ்ரீசொக்கநாதர் பூஜை மடத்தில் 27-வது குருமகா சந்நிதானம் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். தொடர்ந்து, ஸ்ரீசொக்கநாத பெருமானை தலையில் சுமந்து, திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் கைத்துணையோடு, திருக்கூட்டத்து அடியவர்கள் புடைசூழ, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, சிவனடியார்கள் திருமந்திரம் ஓத, கயிலை வாத்தியங்கள் முழங்க, யானை, குதிரைகள் முன்செல்ல குருலிங்க சங்கம பாத யாத்திரையாக புறப்பட்டார். நிகழ்ச்சியில், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனத் தொடக்கப்பள்ளி செயலர் சௌந்தரராஜன், தருமபுரம் ஆதீன தேவாரப்பாடசாலை நிர்வாக இயக்குநர் தணிக்கையாளர் குரு.சம்பத்குமார், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் மணி, தருமபுரம் ஆதீனக்கல்லூரிச் செயலர் செல்வநாயகம், வர்த்த சங்க பிரமுகர்கள் செந்தில்வேல், பாண்டுரெங்கன், சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். யாத்திரையின்போது, ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு ஏவிசி கல்விக்குழுமம் சார்பில் குருமகா சந்நிதானத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு, குருமகா சந்நிதானத்துக்கு தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar