பதிவு செய்த நாள்
21
மார்
2022
03:03
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் கோவிலில் கேது பெயர்ச்சி விழா மதியம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது நவக்கிரக தலங்களில் ஒன்றான இத்தலத்தில் கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சாயா கிரகம் என்று அழைக்கப்படும் கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடையக் கூடியவர் கேது பெயர்ச்சி விழாவான இன்று மதியம் 03:14 மணிக்கு கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இக்கோவிலில் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கேது பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து கேது பகவான் பெயர்ச்சி அடைந்து 03:14 மணிக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை கோவில் அர்ச்சகர்கள் மணிபட்டு குருக்கள், தலைமையிலான சண்முகம் குருக்கள், கார்த்திகேயன் குருக்கள், கல்யாணம் குருக்கள் ஆகியோர் செய்து வைத்தனர். பெயர்ச்சி விழாவில் பரிகார ராசிகளான மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை உடைய பக்தர்கள் திரளாக வந்து கேது பகவானை தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூம்புகார் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன் செய்திருந்தார்.