Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கோவிலில் ராகு, கேது ... அவிநாசி பெரிய கோவில் கும்பாபிஷேகம் எப்போது ? அவிநாசி பெரிய கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு

பதிவு செய்த நாள்

22 மார்
2022
12:03

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்று கோவில் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை சம்ஹாரம் செய்த அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் 11:30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவிலுக்கு வர்ணம் தீட்டுதல், சுவாமிகள் சுவாமிகளின் சித்திரங்கள் வரைதல், யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் உதவி ஆணையர்கள் கும்பகோணம் இளையராஜா, உப்பிலியப்பன் கோவில் ஜீவானந்தம், மயிலாடுதுறை முத்துராமன் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கோவில் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், யாகசாலை அமைப்பு, கோவிலின் உட்பிரகாரம், கோவில் மேல்தளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து அவர்கள் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். முன்னதாக கோவில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை மேலாளர் மணி மற்றும் திருக்கடையூர் கோவில் கேசியர் ஸ்ரீராம் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar