பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2022 01:03
பழநி: பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியிறக்கதுடன் நிறைவு பெற்றது.
பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, முருகனின் மூன்றாம் படைவீடான வீடான திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 17ல் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும். வெள்ளி தேரோட்டமும் நடந்தது. தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. மேலும் மாலை நேரத்தில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு தங்கமயில், பிடாரி மயில் உட்பட பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். உள்ளூர், வெளியூர் வெளிமாவட்ட பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். மார்ச்.,18ல் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. நேற்று (மார்ச் 21) கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா உற்சவம் நிறைவு பெற்றது. கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில் குமார் செய்தனர்.