குன்னுார்: குன்னூர் மல்லிக்கொரை கிராம முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவில், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழாவில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை ஊர் விழா குழுவினர் செய்தனர்.