சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரதவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா பரவல் ஒழிய வேண்டி சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனைகளை பட்டர் கார்த்திக் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்தார். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.