Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கடஹர சதுர்த்தி பூஜை பொள்ளாச்சி கோவில்களில் ராகு கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

22 மார்
2022
04:03

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.

கோவில் குண்டம் திருவிழா, கடந்த 16 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று( 22 ம் தேதி) பக்தர்கள் குண்டம் பூ இறங்குதல், நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை 4.00 மணிக்கு கோவில் தலைமை பூசாரி மனோகரன், விநாயகமூர்த்தி, ஆகியோர் கை குண்டம் வாரி இறைத்து, குண்டம் பூ இறங்குதலை தொடங்கி வைத்தனர். இதனை தோடர்ந்து, வீர மக்கள் மஞ்சள் சேலை உடுத்தி வரிசையாக அம்மா கொண்டத்து காளியம்மா என்ற கோஷத்துடன் வரிசையாக குண்டம் பூ இறங்கினர். பெண் போலீஸ் உட்பட 5 க்கு மேற்பட்ட போலீசார் சீருடையில் குண்டம் இறங்கினர்.

வீர மக்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4.00 மணி முதல், தொடங்கிய குண்டம் இறங்குதல் 10.00 மணிவரை நடைபெற்றது. குண்டம் இறங்கும் போது, பாதிக்கப்பட்டவர்களூக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மதியம் 2.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளல், உள்ளிட்டவையும், 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், கோபி மற்றும் பெருமாநல்லூரை சுற்றி உள்ள கிராம பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 30 இடங்களில் மொபைல் டாய்லெட், 7 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக கானப்படுவதால், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் கானும் வகையில் இரண்டு இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி., டி.வி அமைக்கப்பட்டிருந்தது. அவிநாசி டி.எஸ்.பி. தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. போலீசார், ஆயிதபடை, ஊர்காவல்படையினர், என 800 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar