Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

26 மார்
2022
10:03

மயிலாடுதுறை : திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோயிலில் வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி நேற்று கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் சஷ்பயப்தபூர்த்தி, பீரமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் சீரிய முயற்சியால் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெறகிறது.120 வேத விற்பன்னர்கள் 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவைநடக்கிறது. கடந்த 23ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடந்தது வருகிறது. இன்று நடந்த யாகசாலை பூஜையில் தருமை ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.இதில் காசித்திருமடத்ததிபர் காசிவாசி சுவாமிகள்,
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன்   ஆதிகேசவலு ,ஆகியோர் வழிபாடு நடத்தினர். மாலை 5ம்கால யாக பூஜையில் வாழும்கலைநிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி மற்றும்  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதாமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar