மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா: ஏப்.12 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2022 02:03
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா வருகிற ஏப்.12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப். 16ம் ஆற்றில் அழகர் இறங்குகிறார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு சித்திரை திருவிழா வருகிற ஏப்.12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை ஏப்.15ம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்குதல் ஏப்.16ம் தேதியும்,நிலாச்சோறு நிகழ்ச்சி ஏப். 17ம் தேதியும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.