பதிவு செய்த நாள்
29
மார்
2022
03:03
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் தயானந்த நகர் ஸ்ரீபந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நுாதன ஆலய பிரதிஷ்டை அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஏப்ரல் 3 முதல் 6 வரை நடக்கிறது. முதல் நாளான, ஏப்., 3 காலையில் விக்னேஸ்வர பிரார்த்தனை, குருவந்தனம், தீப பூஜை, எஜமான பிரதிஷ்டா சங்கல்பம், சிவபிராமண அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவசனம், பஞ்சசுத்தி, மஹாகணபதி ஹோமம்.தனலட்சுமி பூஜை, நவக்கிரஹ ஹோமம், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், பஞ்சவாத்ய, சண்டமேளம், நாதஸ்வர வாண வேடிக்கை முழங்க அனைத்து பக்தர்களுடன் தர்மசாஸ்தா ரத உற்சவம் ஊர்வலம் நடக்கிறது.
மாலையில் மிருத்சங்க்ரஹணம், பிரவேசபலி, ரக்ேஷாக்ன ஹோமம், வாஸ்துசாந்தி நடக்கிறது. இரண்டாம் நாளான ஏப்., 4 காலையில் சாந்தி ஹோமம், அக்னி சங்க்ரஹணம், யாகசாலை அலங்காரம், நுாதன பிம்பங்களுக்கு அஷ்டாதச க்ரியைகள், கோ பூஜை. மாலையில் அங்குரார்ப்பணம், ஆசார்ய ரக் ஷாபந்தனம், எஜமான ரக் ஷாபந்தனம், விசேஷ சந்தி, சூரிய பூஜை, மண்டல பூஜை, பஞ்சசுத்தி, தர்மசாஸ்தா பஞ்சாஸன பூஜை.கும்ப அலங்காரம், கலா கர்ஷணம், யாத்ரா தானம், யாகசாலை, பிரவேசம், முதல் கால யாகம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, ேஷாடசோபசார தீபாராதனை நடக்கின்றன.மூன்றாம் நாளான ஏப்., 5 காலையில் விசேஷ சந்தி, சோமகும்ப பூஜை, இரண்டாம் கால யாகம், யந்த்ர ஸ்தாபனம், பிம்ப ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், வேதிகார்ச்சனை, அத்வஷட்க நியாசம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, ஷோடசோபசார தீபாராதனை.மாலையில் சிறப்பு சந்தி, சோமகும்ப பூஜை, மூன்றாம் கால யாகம், சன்னிதிகளில் பஞ்சமுக தீப ஸ்தாபனம், பிம்ப சுத்தி, பிம்ப ரக் ஷாபந்தனம், தத்வார்ச்சனை, நாடீசந்தானம், ஸ்பர்சாஹூதி, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, ஷோடசோபசார தீபாராதனை.நான்காம் நாளான ஏப்., 6 அதிகாலையில் விசேஷ சந்தி, சோமகும்ப பூஜை, நான்காம் கால யாகம், திரவ்யாஹூதி, மஹாபூர்ணாஹூதி, யாத்ரா ஹோமம், க்ஷணஹோமம், யாத்ரா தானம், தசதானம், லக்பிரீதி; காலை 9:05 க்கு மேல், 10:14 மணிக்குள் கலசங்கள் புறப்பாடு, விமான கோபுர கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிேஷகம், ஸ்ரீதர்மசாஸ்தா மூலாலய மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலையில் மண்டல பூஜையை முன்னிட்டு மஹா கும்பாபிேஷகம், புஷ்பாபிேஷகத்துடன் மண்டல பூஜை ஆரம்பமாகிறது.ஸ்ரீபந்தளராஜா அய்யப்பன் பக்த மண்டலி சேவா டிரஸ்ட் பக்தர்கள் சார்பில் அய்யப்ப பஜனை; இரவு மஹா மங்களாரத்தி, ஹரிவராசனம், தாலாட்டு நடக்கிறது. இந்த தகவலை பரமசிவம் குருசாமி தெரிவித்தார்.