பதிவு செய்த நாள்
30
மார்
2022
07:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, கோவில் அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி பெருமானுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம்,தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் பெரியநாயகர், பெரியநாயகி சுவாமிகள் மூன்றாம் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.