Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோயிலில் ... வெள்ளிங்கிரி மலைக்கு 51வது ஆண்டாக பாத யாத்திரை வெள்ளிங்கிரி மலைக்கு 51வது ஆண்டாக பாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

30 மார்
2022
10:03

தஞ்சை: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா இன்று (30ம் தேதி) காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் பெரியகோவிலில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்குள்ள புறப்பாடாகி இன்று(30ம் தேதி) காலை கொடியேற்றப்பட்டது.  நாளை 31ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடும், மாலை சிம்ம வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. 1ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு, 2ம் தேதி காலை விநாயகருக்கு சந்தனக்காப்பும், மாலை  மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. 3ம் தேதி காலை சுப்பிரமணியர் பல்லக்கு புறப்பாடும், மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடும், 4ம் தேதி சுப்பிரமணியருக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடு நடக்கிறது. 5ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் புறப்பாடு, சுவாமி சந்திரசேகரர் பட்டமும், மாலை சூரிய பிரபையில் சந்திரசேகர சுவாமி புறப்பாடும், 6ம் தேதி மாலை சந்திர பிரபையில் சுவாமிகள் புறப்பாடும், 7ம் தேதி மாலை கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரவேசம், செங்கோல் வைபவம், 8ம் தேதி மாலை சுவாமிகள் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, 9ம் தேதி மாலை பூதவாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 10ம் தேதி வெள்ளியானை வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 11ம் தேதி காலை சந்திரசேகர் வெண்ணெய்தாழி அலங்காரமும், மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

அன்றைய தினம் ஓலைச்சப்பரத்தில் சந்திரசேகரர் சுவாமி, அம்பாள் புறப்பாடும் நடக்கிறது.12ம் தேதி மாலை சுவாமிகள் கைலாச பர்வத வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 13ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், அன்று காலை 5.45 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி, ஸ்கந்தர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன்  முத்துமணி அலங்காரத்தில் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 16ம் தேதி கொடியேற்றத்துடன் விழா முடிவு பெறுகிறது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar