சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கூத்தாடி அம்மனுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
இக்கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 22ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒன்பது நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பெரியகடைவீதி, காரைக்குடி ரோடு வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இரவு அக்னி சட்டி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.