மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைப் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2022 08:03
மானாமதுரை மானாமதுரையில் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு சித்திரை திருவிழா நடை பெறுவதற்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது உற்சவர் எல்லைப்பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் தினந்தோறும் வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போது மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். எல்லைப்பிடாரி அம்மன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து எல்லைப்பிடாரியம்மன் கோவில் வரை அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வந்தார் விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.