பதிவு செய்த நாள்
31
மார்
2022
02:03
தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு இரவு 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.பின்னர் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தைத் துவங்கினர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ம் தேதியும்,மறுநாள் 6ஆம் தேதி மின் விளக்கு அலங்கார தேரோட்டமும் நடைபெற உள்ளது. பொங்கல் விழா துவங்கியதை யடுத்து மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.