Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று யுகாதி: தெலுங்கு புத்தாண்டு.. திருப்பதியில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
இன்று யுகாதி: தெலுங்கு புத்தாண்டு.. திருப்பதியில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
08:04

தெலுங்கு புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது. திருப்பதியில் கோயில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்குவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும்.

கோயில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். அதன் பின் ஜீயர் சுவாமிகளால் ஊர்வலமாக எடுத்து வரப்படும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டு பலனைக் கூறுவர். ராமாயண சொற்பொழிவும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் ஆண்டு முழுவதும் நல்லதாக அமையும். இந்த நன்னாளில் தெலுங்கு ராமாயணத்தில் உள்ள கதையைப் படித்து மகிழ்வோம்.

மொல்லா என்னும் பெண் புலவர் எழுதியது மொல்லா ராமாயணம். மொல்லா என்பதற்கு முல்லைப்பூ என்பது பொருள். கிருஷ்ண தேவராயரின் அவையில் அரங்கேற்றப்பட்ட இதில், வால்மீகி சொல்லாத தகவல் ஒன்று இடம் பெற்றுள்ளது.சீதையுடன் காட்டுக்குச் சென்ற ராமர் ஓடக்காரனான குகனிடம், படகில் ஏற்றிக் கொண்டு கங்கையைக் கடக்க உதவும்படி வேண்டினார். ராமர் மீது மிகுந்த பக்தி கொண்ட குகனுக்கு பயம் ஏற்பட்டது. “சுவாமி... தங்களின் பாதத்துாசு பட்டு கல்லும் பெண்ணாக மாறியது போல, என் படகும் பெண்ணாகி விட்டால் பிழைப்புக்கு நான் என்ன செய்வேன்?” எனக் கேட்டான். ராமரின் பாதத்தில் சிறு துாசு கூட இல்லாமல், கங்கை நீரால் கழுவும்படி வேண்டினான். ராமரும் சிரித்தபடி கால்களைக் கழுவியபின் படகில் ஏறினார். இதைக் கண்ட சீதையும், லட்சுமணரும் சிரித்து மகிழ்ந்தனர். இந்த மகிழ்ச்சி நம் மனங்களிலும் நிலைத்திருக்கட்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar