காரியாபட்டி: காரியாபட்டி கீழஅழகியநல்லூரில் தங்க செல்வ காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா 7 நாட்கள நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், பொங்கல் வைத்து, அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு, முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.