Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. ... கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023 கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை)
மகரம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023 .. உழைப்பால் உயர்வு
எழுத்தின் அளவு:
மகரம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023 .. உழைப்பால் உயர்வு

பதிவு செய்த நாள்

03 ஏப்
2022
02:04

உத்திராடம் 2, 3, 4ம் பாதம்: முயற்சிகளால் வெற்றி

ஆயுளுக்கும் துணிவிற்கும் காரகனான சனியை ராசி நாதனாகவும், ஆத்ம பலத்திற்கும் தலைமைப் பதவிக்கும் காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டவர்கள் நீங்கள். வைராக்கியம் மிக்கவராகவும் துணிச்சல் கொண்டவராகவும் இருப்பீர்கள். உங்கள் நட்சத்திராதிபதியும் ராசிநாதனும் ஒருவருக்கொருவர் பகை பெற்றவர்கள் என்பதால் உங்களில் பலருடைய வாழ்க்கை இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் சங்கடம் கொண்டதாகவே இருக்கும். 2ம் வீட்டில் அமர்ந்து உங்கள் நிலையில் முன்னேற்றங்களை வழங்கிய குரு பகவான் 2022 ஏப்.13  அன்று  மறைவு ஸ்தானமான 3ம் வீட்டிற்கு  பெயர்ச்சியாகிறார். குடும்ப நிலையில் சங்கடத்தை உண்டாக்குவார் என்பதால் உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. குருவின் பார்வைகள் ராசிக்கு 7, 9, 11ம் வீடுகளில் பதிவதால் இந்த இடங்கள் எல்லாம் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

நிதி: லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வருமானத்தில் தடை இருக்காது. எதிர்பார்த்த வகைகளில் பணம் கைக்கு  வரும். தொழில் வழியே வருமானம் அதிகரிக்கும். பணம் தாராளமாக நடமாடும். புதிய வீட்டில் குடியேறும் பாக்கியம் சிலருக்கு உண்டாகும். சிலர் புதிய சொத்துகள் வாங்குவர்.  அரசு வழியிலும் ஆதாயம் உண்டாகும்.

குடும்பம்: ஜென்ம சனி குடும்பத்திற்குள் குழப்பம், நிம்மதியற்ற நிலையை வழங்குவார். உங்கள் துணைக்கும் உங்களுக்குமிடையே பிரச்னை உருவாகலாம். 4ல் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் தாயாரின் உடல் நிலையில் சங்கடம் உண்டாவதுடன் உங்கள் உடல் நிலையில் அயர்ச்சியை உருவாக்குவார். பிள்ளைகள் வழியில் உண்டான பிரச்னைகள் விலகும். எதிர்பாலினரின் நட்பு உண்டாகும். அதன் வழியே குடும்பத்திற்குள் பிரச்னைகள் உருவாகும் நிலை உள்ளது.

கல்வி: ஜென்ம சனி சங்கடப்படுத்திப் பார்ப்பார். விடாமுயற்சி மேற்கொண்டாலும் பிரச்னை என்று ஏதாகிலும் ஒன்று உருவாகி உங்கள் கவனத்தை சிதற வைக்கும். பொறியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் ஓரளவு  முன்னேற்றம் காண்பர். அரசுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனமுடன் படிப்பது நல்லது. சிரமங்கள் வந்தாலும் தேர்வு வரை அதை சமாளிப்பது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரை  உங்களை வெற்றியடைய வைக்கும்.

பெண்கள்: ஜென்ம சனி, சுக ஸ்தானத்தில் ராகு என்ற நிலையால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். உடலில் ஏதாவது ஒரு பிரச்னை உருவாகி உங்களை வாட்டும். ஒரு சிலருக்கு கர்ப்பப்பை, சிறுநீரக வழிகளில் சிகிச்சை தேவைப்படும். சிலர் தடுமாற்றம் என்ற நிலையை அடைவீர்கள். 11ம் இடத்தைப் பார்க்கும் குருவால் புதிய நட்பு உண்டாகும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு அதற்குரிய யோகம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் நெருக்கம் உண்டாகும்.

உடல்நிலை: தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். ஜென்ம சனியால் நெஞ்சு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் தோன்றும். சிலர் விபத்துக்கும் ஆளாவீர்கள். 4ல் சஞ்சரிக்கும் ராகு உங்கள் ஆரோக்கியத்தில் சங்கடத்தை உருவாக்குவார். தாம்பத்தியத்திலும் சிலர் சங்கடத்தை அடைவீர்கள். உடல்வலி, மூட்டுவலி, எரிச்சல், மன உளைச்சல் என உங்கள் நிலையை நீங்கள் சரிசெய்து கொள்வதிலேயே உங்கள் கவனம் செல்லும்.

தொழில்:  கேது தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலை விருத்தி செய்ய கடுமையாக போராட வேண்டி இருக்கும். இருந்தாலும் லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் லாபம் வரும். கூட்டுத்தொழிலில் வளர்ச்சி ஏற்படும். சிறிய கம்பெனிகள், கடைகள், ஸ்டீல்ஸ் நிறுவனம், பேக்டரிகள், வாகன விற்பனை, உதிரி பாகங்கள் தயாரிப்பில்  ஈடுபட்டுள்ளோர் முன்னேற்றம் காண்பர். அந்நிய இனத்தினருடன் தொழிலில் ஈடுபடும்போது எச்சரிக்கையாக இருங்கள்.  புதிய முயற்சிகள், விரிவாக்கம் என்பதெல்லாம் இக்காலத்தில் வேண்டாம். 2022 மே25 அன்று சனி வக்ரகதி அடைகிறார் என்பதால் அதன் பிறகு தொழிலில் இப்போதுள்ள சங்கடங்கள் விலகும். அரசு, தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் பொறுப்புடன் செயல்படுவதுடன் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை மனதில் நினைத்து செயல்படுங்கள். சனிக்கிழமைகளில் அவரை தரிசித்தால் சங்கடங்கள் விலகும்.

திருவோணம்: குருபார்வையால்  நன்மை

உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், ஆயுள் காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்டவர் நீங்கள். ஒருபக்கம் மென்மையும், மறுபக்கம் கடுமையும் கொண்டவராக இருப்பீர்கள். இதற்கு காரணம்  ராசிநாதனும்,  நட்சத்திராதிபதியும் ஒருவருக்கொருவர் பகை கிரகம் என்பதால் இருவருடைய தன்மைகளும் உங்களிடம் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும். இதுதான் பாதை இதுதான் செயல் என தீர்மானிக்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கை செல்லும். ஏழரை சனியில் ஜென்ம சனியாக சஞ்சரித்து வந்தாலும் அவரே உங்கள் ராசிநாதன் என்பதால் மற்றவர்களுக்கு வழங்குவது போல் கடுமையான பலன் தர மாட்டார் என்பதுடன், இரண்டாம் சுற்றான பொங்கு சனியை சந்திப்பவர்களுடைய நிலை இக்காலத்தில் செல்வம், செல்வாக்குடன் திகழும். இந்த நிலையில் உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து முன்னேற்றத்திற்கு  வழிகாட்டிய குரு 2022 ஏப்.13 முதல் ராசிக்கு 3 ஆம் வீடான மீனத்தில் சஞ்சரிக்க உள்ளார். இக்காலத்தில் குரு உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்குவார்? உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குவார் என்பதைப் பார்ப்போம்.

நிதி: குருபகவான் மூன்றாமிடத்தில் மறைவு பெற்றாலும் அவரது 9ம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிவதால் இக்காலத்தில் வருவாய்க்கு தடை இருக்காது. நீங்கள் நினைத்ததை வங்கியில் கடன் பெற்றாவது நிறைவேற்றிக் கொள்வீர்கள். வருமானத்தை அதிகரித்து வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வழிகளில் முன்னேறுவீர்கள். அதற்கான உழைப்பும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய சொத்துகள் வாங்குவது, இருக்கும் இடத்தை விரிவு செய்வது குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பது என்று செயல்பட்டு வருவீர்கள்.  வெளிவட்டாரத்திலும் உங்கள் மதிப்பு கூடும்.

குடும்பம்: ஜென்ம சனி அவர் பங்கிற்கு வழங்க வேண்டிய சங்கடங்களை வழங்குவார். 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு  உடல் நிலையில் அசதி, சோர்வை உண்டாக்குவார். 7ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் கணவன். மனைவிக்குள் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய வாழ்க்கை ஆதாரத்தை இக்காலத்தில் உருவாக்குவீர்கள்.   திருமணத்திற்காக வரன் தேடி வந்தவர்களுக்கு யோகம் உண்டாகும். நண்பர்களால் நல்ல ஆலோசனை கிடைக்கப் பெறுவீர்கள். 11ம் இடத்தின் மீது குருவின் பார்வை பதிவதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்திற்குள் நிம்மதியை இழக்க வேண்டிய நிலை வரலாம்.

கல்வி: கல்வி மீதான ஆர்வம் அதிகரித்திருக்கும்.  3 ல் சஞ்சரிக்கும் குரு ஞாபகமின்மையை ஏற்படுத்துவார். 4 ல் சஞ்சரிக்கும் ராகு உங்கள் சிந்தனையை வேறு வழிகளில் கொண்டு செல்லுவார். டீன் ஏஜ் பிரிவினர் இக்காலத்தில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே தேர்வின் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் கவனத்தை முழுமையாக கல்வியில் செலுத்த வேண்டும். வேலை வாய்ப்பு, வருவாய், மரியாதை, எதிர்காலம் என்பதையெல்லாம் சிந்தித்து இக்காலத்தில் செயல்பட வேண்டும். முயற்சிகளாலும் பயிற்சிகளாலும் மட்டுமே வெற்றியை எட்டக்கூடிய காலமாக இது அமையும்.

பெண்கள்: சுகஸ்தான ராகு மன நிலையில் குழப்பத்தை உண்டாக்குவார். ஜென்ம சனியால் ஆரோக்கியத்தில் சங்கடங்கள் உண்டாகும்.  வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், அலைச்சல் உண்டாகும். திருமண வயதினருக்கு இக்காலத்தில் திருமணம் கூடி வரும். கணவன் மனைவிக்குள்  பிரச்னைகள் விலகும். 11ம் இடத்தைக் குரு பார்ப்பதால் குடும்ப பெண்கள் எதிர்பாலினரின் பழக்கத்தில் ஓரடி தள்ளியே இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பேச வேண்டாம். 4ம் இடத்து ராகு ஆசைகளைத் துாண்டலாம். 3 ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் அறிவாற்றலை மழுங்கடிக்கலாம். 11ம் இடத்தின் மீதான குருவின் பார்வையால் நீங்கள் தடுமாறலாம். தடம் மாறலாம் என்பதால் முடிந்தவரையில் எச்சரிக்கையாக இருங்கள்.

உடல்நிலை: ஜென்ம சனியால் ஏதாவது பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை, மறைமுக இடங்களில் பிரச்னைகள் என்று உண்டாகி சங்கடத்தை ஏற்படுத்தலாம். அதிகப்படியான அலைச்சலால் உடல்நிலை பாதிக்கலாம். சிலர் தவறான பழக்கங்களால் நோய்களுக்கு ஆளாகலாம். 4ல் சஞ்சரிக்கும் ராகு உங்கள் சுகங்களில் சிக்கலை உண்டாக்கலாம். இக்காலத்தில் வாகனப் பயணத்தில் கவனம் தேவை. அதன்வழியே ஒருசிலர் விபத்துகளை சந்திக்கலாம் கவனம். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஓய்வு உறக்கம் என்ற நிலையால் மருத்துவ செலவுகளில் நீங்கள் தப்பலாம்.

தொழில்: பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கும் குருவால் தடைகள் அகலும். முதலீடுகள் செய்தும் அதற்கேற்ற வருவாய் இல்லையே என்பவர்களுக்கு இனி வருமானம் கூடும். சிலர் தொழிலையும் விரிவு செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி என்பதால் இயந்திர வகையிலான தொழில்களில் ஈடுபாடு ஏற்படும். பொறியாளர்கள், எலக்ட்ரிஷியன், பிளம்பர், மெக்கானிக், கடல் தொழில் சார்ந்த பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். எல்லாவற்றையும் கவனிக்க நேரம் போதவில்லையே என நினைக்கும் அளவிற்கு தொழிலில் ஈடுபாடு இருக்கும். இருந்தாலும் 3 ல் சஞ்சரிக்கும் குருவால் சில நேரங்களில் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வைத்து உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கலாம். எதையும் சிந்தித்து, நன்றாக யோசித்து செயல்படுங்கள். அரசு ஊழியர்கள் கவனக்குறைவால் சிக்கல்களுக்கு ஆளாகலாம். இடமாறுதல், வேலையின் காரணமாக அலைச்சல் என்று சந்திக்க வேண்டியதாக இருக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

பரிகாரம்: ஹயக்ரீவரை மனதில் நினைத்து செயல்படுங்கள்  முன்னேற்றமும் செல்வாக்கும் உண்டாகும்.

அவிட்டம் 1, 2 ஆம் பாதம்: உழைப்பால் உயர்வு

தைரியத்திற்கும் வீரியத்திற்கும் காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாகவும், நீதி, நேர்மை, நியாயத்திற்கு காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்டவர்கள் நீங்கள். துணிச்சலும் தைரியமும் மேலோங்கியிருக்கும். மற்றவர்களால் செய்திட முடியாத செயல்களை செய்து முடிப்பதில் வல்லவராக இருப்பீர்கள். அதே நேரத்தில் நியாயம் தர்மத்தில் உங்கள் மனம் உறுதியாக இருக்கும். ஜென்ம சனி உங்களுக்கு சில பாடங்களை வழங்கி இருப்பார். இதே நேரத்தில் 11ல் சஞ்சரித்த கேதுவும். 2 ல் சஞ்சரித்த குருவும் நன்மைகளை வழங்கியிருப்பர். இந்த நிலையில் 2022  மார்ச் 21 அன்று ராகு. கேது பெயர்ச்சி நடந்துள்ளது. குருவும் 2022 ஏப்.13 அன்று ராசிக்கு 3ம் இடமான மீனத்தில் சஞ்சரித்து பலன் வழங்க உள்ளார். மூன்றாமிடத்து குரு உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவாரா? மற்ற கிரகங்களின் சஞ்சார நிலை இக்காலத்தில் எப்படி உள்ளது? அதனால் எத்தகையப் பலன்கள் உண்டாகும்? என்பதை இப்போது பார்ப்போம்.

நிதி: குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற நிலையை அடைவீர்கள். பொருளாதார நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தை காண்பீர்கள். லாப ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும்  உங்கள் கைக்கு வந்து சேரும். வங்கி, நிதி நிறுவனம் வழியே அனுகூலம் அடைவீர்கள். புதிய சொத்துகள், ஆடை ஆபரணம் என வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். அதன் காரணமாக சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். கவர்ச்சி விளம்பரங்களை நம்பி புதிய நிறுவனங்களில் முதலீடு செய்வதால் இழப்பு உண்டாகும் என்பதால் முதலீட்டில் எச்சரிக்கை தேவை.

குடும்பம்: தன் குடும்பம் என்ற எண்ணம் மேலோங்கும். சகோதர வகையில் பிரச்னை உருவாகும். பிள்ளைகளால் உண்டான சங்கடங்கள் விலகும். கணவன், மனைவி உறவில் சந்தோஷமான நிலை உண்டாகும். தந்தை வழியில் அனுகூலமும் ஆதாயமும் அடைவீர்கள். புதிய நட்பினால் குடும்பத்தில் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. வேலை, தொழில் என்று சிலர் குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லும் நிலை உருவாகும் அதன் காரணமாக உங்களுக்கும் குடும்பத்திற்குமான இடைவெளி அதிகரிக்கலாம்.

கல்வி: கல்வியில் தடைகள் ஏற்படும். 4ல் உள்ள ராகு உங்கள் கவனத்தை வேறு வகையில் திருப்புவார். 3ல் சஞ்சரிக்கும் குரு ஞாபக மறதியை உண்டாக்குவதுடன் சிந்தனை ஆற்றலையும் முடக்குவார். பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் முழு கவனத்தையும் பயிற்சியின் மீது செலுத்த வேண்டும். தவறான சிந்தனைகளும் பழக்க வழக்கங்களும் இக்காலத்தில் உங்களை சோதனைக்கு ஆளாக்கும். கல்வியில் உங்களின் கவனம் முழுமையாக இருக்கட்டும். வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயிலும் எண்ணம் வேண்டாம். அதனால் சங்கடங்களே உண்டாகும்.

பெண்கள்: உறவினர் வகையில் சங்கடங்கள் தோன்றும். சகோதர வகையில் எதிர்பார்த்த நன்மை இக்காலத்தில் கிடைக்காமல் போகலாம். கணவரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். திருமண வயதினருக்கு தாலி பாக்கியம் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். சந்தோஷ நிலையை எட்ட முயற்சிப்பீர்கள். புதிய நண்பர்களால் உங்களின் தேவைகள் நிறைவேறுவதுடன் உங்கள் நிலையிலும் மாற்றங்கள் உண்டாகலாம். வயிறு, கர்ப்பப்பை, சிறுநீரக பிரச்னைகள் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் கவனமாக இருப்பதுடன் சின்னதாக பாதிப்பு உண்டாகும் போதே மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. அரசு பணியாளர்கள்  வேலையின் காரணமாக வெளியூர் சென்று வசிக்கும் நிலை உருவாகும்.

உடல்நிலை: ஜென்ம சனியும், 4ல் சஞ்சரிக்கும் ராகுவும்  உடல்நிலையில் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். வேலையில் உண்டாகும் நெருக்கடிகளாலும், தேவையற்ற பிரச்னைகளாலும் டென்ஷன். பரம்பரை நோய்களாலும்  பாதிக்கப்படுவீர்கள். அல்சர், ஒவ்வாமை என்ற பாதிப்பிற்கு சிலர் ஆளாவர். பயணத்திலும், வாகனத்தை இயக்குவதிலும் கூடுதல் கவனம் தேவை. ஒழுக்கக் குறைவான செயல்பாடுகளால் ரகசிய நோய்களும் உண்டாகலாம். உணவு வகைகளில் கவனமாக இருப்பதும் உங்கள் உடல் நலனைப் பாதுகாக்கும்.

தொழில்: குருவின் 3ம் இட சஞ்சாரத்தால் அரசு ஊழியர்கள் இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் தொழிலில் தடைகளையும் சங்கடங்களையும் உருவாக்கலாம். தொழிலையொட்டி பயணங்களும் அலைச்சல்களும் உருவாகலாம் என்றாலும், உங்கள் முயற்சிகளால் சங்கடங்களை மாற்றுவீர்கள். கடுமையான உழைப்பினால் எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். விவசாயம், கால்நடைகள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கம்பெனிகள், தொழிற்சாலைகள், மருந்து, பெட்ரோலியம், ஓட்டல், சூளைகள் வைப்போர், வழக்கறிஞர்கள், யூனிபார்ம் சர்வீஸில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: திருச்செந்துார் முருகப்பெருமானை மனதில் நிறுத்தி செயல்பட சங்கடங்கள் தீரும். நன்மைகள் உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை) »
temple news
அசுவினி: குடும்பத்தில் சுபச்செலவுகுருபகவான் ஏப்.22,2023 இரவு 11:27 மணிக்கு உங்கள் நட்சத்திரத்தின் முதல் ... மேலும்
 
temple news
கார்த்திகை: போட்டியில் வெற்றிகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஆறாவது ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உறவினர்களால் நன்மைகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி நான்காவது ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்ரத்தின் முதல் ... மேலும்
 
temple news
மகம்: ஒன்பதில் குருபகவான்குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு 11:27 மணிக்கு உங்களின் பத்தொன்பதாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar