பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
11:07
பெரியபாளையம்: ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட ஏராளமானோர் பாதயாத்திரையாக பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டனர்.நேற்று ஆடி மாதம், முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, பவானியம்மனை தரிசிக்க, ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதயாத்திரையாக சென்று பவானியம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வேப்ப இலை அணிந்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். வேன், பஸ்களில் பக்தர்கள் குவிந்ததால், சாலை முழுவதும் மக்கள் கூட்டமாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாகச் சென்றன. பெரியபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.