பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
11:07
திண்டுக்கல்: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுற்றியுள்ள கிராமப் பெண்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை வணங்கி சென்றனர்.
* தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சிவசக்தி ஆன்மிக அறக்கட்டளை, காமாட்சி அம்மன் ஆராதனை குழு சார்பில் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கிராமப் பகுதிகளில் உள்ள காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.