திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மனுக்கு பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவிலில் நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 7 மணிக்கு பக்தர்கள் தென்பெண்ணையில் நீராடி 108 பால்குடம் ”மந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு பூஜை செய்தனர்.வரும் 24ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி சாகை வார்த்தலும், 11ம் நாள் மூன்றாம் வெள்ளிக்கிழமை செடல் உற்சவமும் நடக்கிறது.