திருவள்ளூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, புட்லூர் அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அங்குள்ள புற்றுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு காலை அபிஷேகமும், புஷ்ப அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்புலி அம்மன் கோவில், மூங்காத்தம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கீழ்நல்லாத்தூர் எல்லை அம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.