உடன்குடி: குலசேகரன்பட்டணம் வீரமனோகரி அம்மன் கோயிலில் இன்று ஆடிப்பூர விழா துவங்குகிறது.குலசேகரன்பட்டணம் வீரமனோகரி அம்மன் கோயிலில் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆடிப்பூர விழா இன்று இரவு 9 மணிக்கு மாக்காப்பு பூஜையுடன் துவங்குகிறது. நாளை ஆடிப்பூரவிழாவையொட்டி காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு சாமிதரிசனம் செய்வர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வீரபாகு வல்லவராயர் செய்துவருகிறார்.