பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
11:07
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை மாரியம்மன் கோவிலில், முதல் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி காலை 11.00 மணிக்கு திருமஞ்சனம், உச்சிகால பூஜையும் நடந்தது. மாலை 6.00 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.நேருவீதி காமாட்சி அம்மன் கோவிலில், காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.00 மணிக்கு கோ -பூஜை, 7.30 மணிக்கு நவக்கிரக ஹோமமும், காலை 10.00 மணிக்கு மகாலட்சுமி ஹோமம்; மாலை 5.30 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. குறிஞ்சேரி பூமிலட்சுமி அம்மன் கோவிலில், காலை 8.00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில், சிப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனையும் நடந்தது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.