உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் சிவகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வருகிற ஏப்.,16 அன்று சித்திரை விழாவை முன்னிட்டு பால்குடம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது. நேற்று காப்பு கட்டுதலுடன் பூஜை துவங்கியது. மூலவர் சிவ காளி அம்மன், சோனைக்கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பூஜகர் முருகன் செய்திருந்தார்.